ADVERTISEMENT

அன்வர் ராஜா திடீர் நீக்கம் - ஜெயக்குமார் வரவேற்பு!

08:28 AM Dec 01, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

அதிமுகவிலிருந்து அன்வர் ராஜா நீக்கப்பட்டது சரியான ஒன்று தான் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் ஒன்பது மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அடைந்த படுதோல்விக்குப் பிறகு சிலர் மீண்டும் சசிகலாவை அதிமுகவுக்கு கொண்டு வர வேண்டும் என்று தொடர்ந்து பேசி வருகிறார்கள். குறிப்பாக இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், சசிகலா இணைப்பு தொடர்பாகக் கட்சி நிர்வாகிகள் கலந்து பேசி முடிவு செய்வார்கள் என சில வாரங்களுக்கு முன்பு கருத்து தெரிவித்திருந்தார். அப்போதே அவருக்கு எதிராக சில முன்னாள் அமைச்சர்கள் பேசினார்கள். குறிப்பாக ஜெயக்குமார், சசிகலா நீக்கப்பட்டுவிட்டார், அதைப் பற்றி யாரும் பேசக்கூடாது என்றார். இந்நிலையில் சசிகலா இணைப்பு பற்றித் தொடர்ந்து தொலைக்காட்சியில் பேசி வந்த முன்னாள் அதிமுக மூத்த தலைவர் அன்வர் ராஜா தற்போது அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஜெயக்குமார், " அதிமுகவிலிருந்து கொண்டே கட்சியை விமர்சனம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அன்வர் ராஜா நீக்கம் என்பது சரியான முடிவுதான்" என்றார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT