ADVERTISEMENT

விடைத்தாள் முறைகேடு; அண்ணா பல்கலை தற்காலிக பணியாளர்கள் பணியிடை நீக்கம்

10:37 AM Mar 20, 2019 | kalaimohan

விடைத்தாள் முறைகேடு விவகாரத்தில் தேர்வுகள் தொடர்பான பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 37 தற்காலிக பணியாளர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளது அண்ணா பல்கலைக்கழகம்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விடைத்தாள் முறைகேடு தொடர்பாக ஏற்கனவே பேராசியர் உமா உட்பட நான்கு பேராசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் நடைபெற்ற தேர்வில் விடைத்தாள் மதிப்பீட்டில் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்கள் அல்லாத மூன்றாம்கட்ட தற்காலிக ஊழியர்கள் பணம் பெற்றுக்கொண்டு பல மாணவர்களை தேர்ச்சி பெற வைத்ததாக எழுந்த புகார் தற்போது நிரூபணம் ஆகியுள்ள நிலையில், 37 தற்காலிக பணியாளர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளது அண்ணா பல்கலை.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT