ADVERTISEMENT

அண்ணாமலை புகார்- கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர்கள்! 

12:48 PM Jun 07, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்துப் பெட்டகம் வழங்குவதில் முறைகேடு என பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, கடந்த சில நாட்களுக்கு புகார் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், சென்னை, நந்தனத்தில் இன்று (07/06/2022) மதியம் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர்கள் நாசர், மா.சுப்பிரமணியன் அண்ணாமலையின் புகாருக்கு விளக்கம் அளித்தனர்.

அப்போது பேசிய அமைச்சர் கூறியதாவது, "மகப்பேறு மகளிருக்கான ஊட்டச்சத்துப் பெட்டகம் வழங்கும் திட்டத்தில் Pro- PL Health Mix 2018 முதல் வழங்கப்படுகிறது. ஊட்டச்சத்து பெட்டகத்தில் ஆவின் நெய் உள்பட 8 பொருட்கள் வழங்கப்படுகின்றன. ஊட்டச்சத்துப் பெட்டகம் குறித்து உண்மைக்கு புறம்பான தகவல்களை சிலர் வெளியிடுகின்றனர். தன்னை முன்னிலைப்படுத்தவும், விளம்பரத்திற்காகவும் சிலர் தவறான தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

Pro- PL Health Mix போன்ற Health Mix- ஐ இனிவரும் காலங்களில் தான் ஆவினில் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆவினில் இல்லாத ஒரு பொருளுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாகக் கூறுவது வேடிக்கையாக உள்ளது" என்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT