ADVERTISEMENT

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மாணவர் சேர்க்கை குழுவிலிருந்து விலகல்!!!

11:12 AM Feb 27, 2019 | kamalkumar

ADVERTISEMENT


ADVERTISEMENT

பொறியியல் மாணவர் சேர்க்கை பொறுப்பிலிருந்து துணைவேந்தர் எம்.கே. சூரப்பா மாணவர் சேர்க்கை குழுவிலிருந்து பதவி விலகினார். கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துவதால் நிர்வாகச் சிக்கல் ஏற்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார். சூரப்பாவின் பதவி விலகல் கடிதத்தை உயர்கல்வித்துறை ஏற்றுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கையை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்த வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT