ADVERTISEMENT

நாங்குநேரியில் காங்கிரஸ்... விக்கிரவாண்டியில் திமுக- ஸ்டாலின் பேட்டி! 

05:29 PM Sep 21, 2019 | kalaimohan

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக். 21 தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கை அக்.24 தேதி நடைபெறும் என்றும், செப்டம்பர் 23 தேதி முதல் வேட்புமனுவை தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT


இந்நிலையில் அண்ணா அறிவாலயத்தில் தோழமை கட்சிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின், நாங்குநேரி தொகுதியில் தோழமை கட்சியான காங்கிரஸ் போட்டியிடும், விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிடும். புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும் என கூறினார்.

திமுக பொதுகுழுக்கூட்டம் வரும் அக் 6 ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பொதுகுழுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில்
போட்டியிட செப்டம்பர் 22 ஆம் தேதி விருப்பமனு விநியோகிக்கப்படும் என திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 23 ஆம் தேதி மாலை 6 மணிக்குள் அண்ணா அறிவாலயத்தில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்க வேண்டும் எனவும், செப்டம்பர் 24 ஆம் தேதி நேர்காணல் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT