ADVERTISEMENT
இந்தியா முழுவதும் சிவராத்திரி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிவ ஆலயங்கள் மட்டும் இல்லாமல் பல்வேறு அம்மன் கோவில்களிலும் இன்றைய தினம் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். சென்னை, திருவல்லிக்கேணி நடடேசன் சாலையில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு மாபெரும் பாலாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக, 1008 பெண்கள் பால்நிரம்பிய குடங்களை ஊர்வலமாக எடுத்துவந்தனர். நாக்கில் அலகு குத்தியும், காவடி எடுத்தும் பல பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments