திருவண்ணாமலை வந்தவாசியில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் பேசிய அதிமுக நிர்வாகி பாடிய அம்மன் பக்தி பாட்டுக்கு கூட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் சாமிவந்தாடினர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மருதாடு கிராமத்தில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த விழுப்புரம் செல்வராஜ் என்ற பேச்சாளர் திடீரென ''மலையனூரு அங்காளியே'' என்ற அம்மன் பாடலை பாடினார். அப்போது மேடைக்கு கீழ் அமர்ந்திருந்த பெண்கள் சிலர் பாடலை கேட்டு பக்தி பரவசத்தில் சாமியாடினர்.
பின்னர் ஒருவழியாக சாமியாடி முடித்த பெண்கள் கூட்டம் நிறைவு பெற்ற பின் ஆர்வத்துடன் நலத்திட்ட உதவிகளை பெற்று சென்றனர்.
ADVERTISEMENT
Show comments