ADVERTISEMENT

காளான் சாப்பிட்ட குழந்தை உட்பட 3 பேருக்கு ஒவ்வாமை

06:53 PM Nov 11, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த தத்தப்பள்ளி அருகே கலைஞர் நகரில் வசித்து வருபவர் குணசேகரன்(38). இவரது மனைவி பிருந்தா(35). இவர்களுக்கு இரண்டு வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. கணவன், மனைவி இருவரும் விவசாய கூலி வேலை பார்த்து வருகின்றனர்.

நேற்று இரவு வழக்கம்போல் வேலையை முடித்துக் கொண்டு குணசேகரன், பிருந்தா இருவரும் வீட்டுக்கு கிளம்பி வந்தனர். அப்போது பிருந்தா தோட்டத்தில் விளைந்திருந்த காளானை பறித்து வீட்டுக்கு எடுத்துச் சென்றார். பின்னர் சமைத்து கணவன் மனைவி சாப்பிட்டனர். அதன்பிறகு குழந்தைக்கும் அதனை கொடுத்துள்ளனர். காளானை சாப்பிட்ட சிறிது நேரத்தில் மூன்று பேருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதை அடுத்து அக்கம் பக்கத்தினர் அவர்களை சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர்கள் மூன்று பேரும் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சாப்பிட்டது விஷத்தன்மை கொண்ட காளான் என தெரியவந்தது. கணவன், மனைவி இருவரும் அபாய கட்டத்தை கடந்துவிட்டதாகவும், குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT