Skip to main content

'சக்தி மசாலா' நிறுவன தம்பதிக்கு பீமரத சாந்தி விழா; நடிகர் சிவகுமார் பங்கேற்பு!

Published on 12/09/2021 | Edited on 12/09/2021

 

 

Bhimaratha Shanti Festival for 'Sakthi Masala' couple; Actor Sivakumar participates!


மசாலா பொருள்கள் தயாரிப்பில் தமிழ்நாட்டில் முன்னணியில் உள்ள நிறுவனமான 'சக்தி மசாலா' நிறுவனங்களின் தலைவர் டாக்டர் பி.சி.துரைசாமி- டாக்டர் சாந்தி துரைசாமி ஆகியோரின் பீமரத சாந்தி விழா, பெருந்துறை சென்னிமலை கவுண்டர் செல்லம்மாள் திருமண மண்டபத்தில் செப்டம்பர்- 8 மற்றும் செப்டம்பர்- 9 ஆம் தேதிகளில் நடந்தது.

 

இந்த வைபவத்தை, பழனி தண்டாயுதபாணி சுவாமி தேவஸ்தான அர்ச்சகர் செல்வசுப்பிரமணிய சிவாச்சாரியார் நடத்தி வைத்தார். அதிகாலையில் கோ பூஜை, சூரிய நமஸ்காரத்துடன் துவங்கி, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் போன்ற பல்வேறு பூஜைகள் நடந்தது. பின்னர் கலச தீர்த்த அபிேஷகம், கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை, கோதானம் மற்றும் பவளமணி தாரணம் ஆகியவை, தம்பதியர் இருவருக்கும் நடத்தப்பட்டது.

 

இதில் முக்கிய நிகழ்வான பவளமணி தாரணத்தை பிரபல நடிகர் சிவகுமார்- லட்சுமி சிவகுமார் தம்பதியர் அணிவித்தனர். அதைத் தொடர்ந்து, விழா மலரை நடிகர் சிவகுமார் வெளியிட்டார். அதேபோல், டாக்டர் எல்.எம்.ராமகிருஷ்ணன், அரிமா.என்.முத்துசாமி, டாக்டர் பி.ஜி.விஸ்வநாதன்- முத்துலட்சுமி விஸ்வநாதன், மூத்த வழக்கறிஞர் காந்தி, சாரதா காளிமுத்து, எஸ்.கே.ஆர்.குமார் மற்றும் குடும்பத்தில் உள்ள மூத்த உறுப்பினர்கள் தம்பதியரை ஆசீர்வாதம் செய்தனர்.

 

மேலும் முக்கிய பிரமுகர்களான ரமேஷ்- பிரபா தம்பதியினர், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி அலாவூதீன், பரணி பாலு தம்பதியினர், டாக்டர் கணபதி குடும்பத்தினர், கேசவன் தம்பதியினர், டாக்டர் அருணாதேவி, டாக்டர் மங்கள், டாக்டர் அஞ்சு தம்பதியினர், டாக்டர் செந்தில்வேலு தம்பதியினர் ஆசிர்வாதம் வழங்கினர்.

 

செப்டம்பர் 8- ஆம் தேதி அன்று மாலை சக்தி மசாலா நிறுவனங்களின் இயக்குனர் செந்தில்குமார், பெற்றோரைப் போற்றி உருவாக்கிய குறும்படம் தீபா, சுவாமி, சுருதி, செங்கதிர் வேலன் பாடிய பாடல்கள் மற்றும் துரைசாமி, சாந்தி துரைசாமி ஆகியோர் கடந்து வந்த பாதையை ஒளி, ஒலி காட்சியாக திரையிட்டனர்.

 

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை இவர்களது மகள் சக்திதேவி, மருமகன் இளங்கோ, மகன் செந்தில்குமார், மருமகள் தீபா, மைத்துனர் வேணுகோபால், கெளசல்யா தம்பதியினர், பேத்திகள் சுவாமி, சுருதி, பேரன் செங்கதிர் வேலன் ஆகியோர் செய்திருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கணேசமூர்த்தி உடலுக்கு துரை வைகோ அஞ்சலி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Durai Vaiko Tribute to GaneshaMurthy 

ம.தி.மு.க.வின் பொருளாளராக இருந்த கணேசமூர்த்தி ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்.பி.யாக பணியாற்றி வந்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் ம.தி.மு.க.வுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணேசமூர்த்தி, சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது தெரியவந்தது. கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி இன்று (28.03.2024) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்ததுடன் நேரில் சென்று உடலுக்கு அஞ்சலியும் செலுத்தினர்.

Durai Vaiko Tribute to GaneshaMurthy 

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறைக்கு இன்று மாலை நேரில் சென்று மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தியின் உடலுக்கு மாலை அணிவித்து ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ இறுதி அஞ்சலி செலுத்தினார். அதே சமயம் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும் அஞ்சலி செலுத்தினார். அனைத்துக் கட்சி முன்னணி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் துரை வைகோ இரங்கல் உரை ஆற்றினார்.

Durai Vaiko Tribute to GaneshaMurthy 

இந்த இரங்கல் கூட்டத்தில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் முத்துசாமி, மு.பெ. சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், அ.தி.மு.க. தலைமைக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி, திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி எனப் பலரும் கலந்து கொண்டனர். 

Next Story

“பேராசான் பிறந்த இடத்திலிருந்து தொடங்குகிறேன்” - கமல்ஹாசன்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
kamalhassan mnm campaign begins with erode

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தமாக ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவித்து பிரச்சாரத்தை தீவிரப்படுத்து வருகின்றனர். 

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், தி.மு.க-வுடனான கூட்டணியில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரித்து கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் விவரங்கள் சமீபத்தில் வெளியாகின. அதில் மார்ச் 29 ஆம் தேதி ஈரோட்டிலும், மார்ச் 30 ஆம் தேதி சேலத்திலும், ஏப்ரல் 2 ஆம் தேதி திருச்சியிலும், 3 ஆம் தேதி சிதம்பரத்திலும், 6 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையிலும், 7 ஆம் தேதி சென்னையிலும், 10 ஆம் தேதி மதுரையிலும், 11 ஆம் தேதி தூத்துக்குடியிலும், 14 ஆம் தேதி திருப்பூரிலும், 15 ஆம் தேதி கோயம்புத்தூரிலும், 16 ஆம் தேதி பொள்ளாச்சியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

இந்த நிலையில் முதற்கட்டமாக ஈரோட்டில் திமுக தலைமையிலான கூட்டணியின் ஈரோடு பாராளுமன்ற வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து ஈரோடு மற்றும் குமாரபாளையத்தில் (வெப்படை) நாளை (29.03.2024 - வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கமல், “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று கற்பித்த பேராசான் பெரியார் பிறந்த ஈரோட்டிலிருந்து என் பரப்புரையைத் தொடங்குகிறேன். இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க” எனக் குறிப்பிட்டுள்ளார்.