நாகையில் ரஸ்னா என கூறி சாராயத்தை ரஸ்னா பாக்கெட்டுகளில் அடைத்து வைத்து விற்பனை செய்ததை எதிர்த்து கொதித்தெழுந்த மக்கள் ரஸ்னா பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்பட்ட சாராய பாக்கெட்டுகளை ரோட்டில் போட்டு உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
நாகை மாவட்டம் ஆக்கூர் மடப்புரத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் ரஸ்னா பாக்கெட்டுகளில் சாராயத்தை அடைத்து வைத்து விற்பனை செய்துவருவது குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை போலீசாரிடம் புகார் கொடுத்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி ஒன்று திரண்டு அந்த பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து சாலையில் தூக்கி எறிந்து வீசி உடைத்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.
உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டம் தீவிரமடையும் என மக்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
ADVERTISEMENT
Show comments