முகவரி இல்லாத அழகிரி தேர்தலை சந்திக்க முடியுமா என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,
அழகிரியே அவரது முகவரி தேடி அழைந்துகொண்டிருக்கிறார். முதலில் அவருக்கு முகவரி கிடைக்கட்டும் பிறகு அழகிரி குறித்து நாம் சிந்திக்கலாம். எத்தனை பேர் தேர்தலில் நின்றாலும், அதிமுக வெற்றி பெறுவது உறுதி.
இரட்டை இலை சின்னத்தில் அதிமுக வெற்றி வாகை சூட முதலமைச்சர், துணை முதலமைச்சர், மூத்த அமைச்சர்கள் வகுத்து தரும் வியூகத்தை தொண்டர்களாகிய நாங்கள் செயல்படுத்தி வெற்றி காண்போம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments