Skip to main content

'கலைஞரின் உடல்நலம் குன்றியதற்கு மு.க.ஸ்டாலினே காரணம்'- மு.க.அழகிரி குற்றச்சாட்டு!

Published on 03/01/2021 | Edited on 03/01/2021

 

'MK Stalin is the reason for the kalaingar's ill health' - MK Alagiri accused!

 

மதுரையில் புதிய கட்சி தொடங்குவது குறித்து தனது ஆதரவாளர்களுடனான ஆலோசனைகூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரி,

 

''என்னை திமுகவில் இருந்து சில துரோகசக்திகள் கலைஞருக்கும், பொதுச்செயலாளர் அன்பழகனுக்கும் தெரியாமலயே என்னை கட்சியில் இருந்து விலக்கிவிட்டார்கள். ஸ்டாலினுக்கு பொருளாளர் பதவி வேண்டும் என என் வீடுதேடி வந்து பரிசீலனை செய்யச் சொன்னார்கள். அதனால் அவர் பொருளாளர் ஆனார். எனக்கு தென்மண்டல அமைப்புச் செயலாளர் பதவி கிடைத்ததால் பொறாமையில் பொருளாளர் பதவி கேட்டார் ஸ்டாலின். 'கலைஞருக்கு பின் நீ தான் எல்லாம்' என ஸ்டாலினிடம் நான் கூறினேன். ஆனால் தற்போது  துரோகம் செய்துவிட்டார். 

 

'MK Stalin is the reason for the kalaingar's ill health' - MK Alagiri accused!

 

நான் மத்திய அமைச்சர் ஆனபோது ஸ்டாலின் துணை முதல்வர் வேண்டும் என கேட்டார். உடனடியாக ஒப்புக்கொண்டேன், கட்சிக்காக மட்டுமே நான் பணிபுரிந்தேன். திமுக உறுப்பினர்கள் பட்டியல் என்ற பெயரில் வாக்காளர்கள் பட்டியலில் உள்ள பெயரை காட்டி கலைஞரை ஏமாற்றியதைச் சுட்டிக்காட்டினேன். எனது பிறந்தநாளிற்காக எனது ஆதரவாளர்கள் 'பொதுக்குழுவே வருக' என அடித்த போஸ்டரை காரணம்காட்டி என் மீது நடவடிக்கை எடுக்கவைத்தார்கள். ஸ்டாலினுக்கு திமுகவினர் 'வருங்கால முதல்வரே' என நிரந்தரமாக  போஸ்டர் அடித்துவைத்துள்ளார்கள். ஆனால் ஸ்டாலின் கடைசிவரை வருங்கால முதல்வர் தான், முதலமைச்சர் ஆகவே முடியாது. கட்சியில் இருந்து நீக்கிய நிலையில் 7 ஆண்டுகளாக பொறுமையாக இருந்துவிட்டோம். நான் எந்த முடிவு அறிவித்தாலும் அதனை எனது ஆதரவாளர்கள் ஏற்றுகொள்வார்கள்.

 

2016-தேர்தலில் கலைஞரை கட்டாயப்படுத்தி திருவாரூர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவைத்து, வேண்டுமென்றே அவரை மேடையில் ஏற்றி பிரச்சாரம் செய்யவைத்து அவரின் உடல்நலனை கெடுக்கவைத்துவிட்டார்கள். விரைவில் நல்ல முடிவை அறிவிப்பேன். எதையும் சந்திக்க தயாராக இருங்கள். கலைஞரையே மறந்து தி.மு.க தற்போது செயல்படுகிறது. கலைஞரின் பெயரை நினைவுகூறும் வகையில், உச்சரிக்கும் வகையில் எனது முடிவு அமையும். எனது முடிவு அப்படியும் இருக்கலாம், இப்படியும் இருக்கலாம், எப்படியும் இருக்கலாம். எனது ஆதரவாளர்களுக்கு எதையும் தாங்கும் இதயம் வேண்டும்'' என்றார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

“ஜெயிச்ச கையோட வேற கட்சிக்கு போயிடாதீங்க...” - செல்லூர் ராஜு கிண்டல்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Don't go to another party after winning'- Sellur Raju teased

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் வேட்பாளர்கள் அறிமுகம் நடைபெற்று வரும் நிலையில், மதுரையில் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மருத்துவர் சரவணனை ஆதரித்து  மதுரை ஜெய்ஹிந்த் புரத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு பேசிக்கொண்டிருந்தபோது வேட்பாளர் சரவணன் கைகூப்பியபடி சிரித்தார். அதைப் பார்த்த செல்லூர் ராஜு,  'வலிக்கிற மாதிரி ஊசி போட்டுடாதீங்க. வலிக்காமல் ஊசி போடுங்க. தலைமை சொல்லிவிட்டால் அந்த கட்டளை தான் எல்லாமே. வேறு எதுவும் கிடையாது. இது சாமி என்றால் சாமி. சாமி இல்லை இது சாணி என்றால் சாணி. நம்மைப் பொறுத்தவரை மதித்தால் மதிப்பு, மரியாதை கிடைக்கும். மரியாதை கொடுக்கவில்லை என்றால் மிதிப்போம்' எனப் பேசியவர், வேட்பாளர் சரவணன் பல்வேறு கட்சிகளுக்கு சென்று வந்தவர் எனக் குறிப்பிட்டு பேசியதோடு 'ஜெயித்த பிறகு வேறு கட்சிக்கு போய் விடக்கூடாது' என கிண்டலாகப் பேசினார்.