ADVERTISEMENT

'தி.மு.க. அரசைக் கண்டித்து நடைபெறுவதாக இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு'- அ.தி.மு.க. தலைமைக் கழகம் அறிவிப்பு!

05:24 PM Dec 08, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

அ.தி.மு.க. தலைமைக் கழகம் இன்று (08/12/2021) வெளியிட்டுள்ள அறிக்கையில், "அ.தி.மு.க. சார்பில், மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாத தி.மு.க. அரசைக் கண்டித்து, மாவட்ட தலைநகரங்களில் 09/12/2021 அன்று நடைபெறுவதாக இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டு, வருகின்ற 11/12/2021 அன்று காலை 11.00 மணியளவில், இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT