கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடிக்கு எதிரான வழக்கை விரைந்து நடவடிக்கை எடுக்காத திமுக அரசைக் கண்டித்து , ஆகஸ்ட் 1-ந்தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறார் ஓபிஎஸ். இந்த ஆர்ப்பாட்டத்தை ஆதரித்து அறிக்கை கொடுத்தார் அமமுக பொதுச் செயலர் தினகரன். ஆர்ப்பாட்டத்துக்கு ஒத்துழைப்பதுடன் ஆர்ப்பாட்டத்தில் அமமுக கலந்து கொள்ளும் எனவும் அறிவித்திருந்தார் தினகரன்.
இந்தநிலையில், ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது குறித்தும், முக்கிய தலைவர்கள் எங்கெங்கு கலந்து கொள்வது குறித்தும், ஆர்ப்பாட்டத்தில் என்னென்ன விபரங்களை தெரிவித்து முழக்கமிடுவது குறித்தும் ஓபிஎஸ் ஆதரவு அதிமுகவினரும், அமமுகவினரும் சென்னை அசோகா ஹோட்டலில் சந்தித்து தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இந்த மீட்டிங்கில் பல விசயங்கள் விவாதிக்கப்பட்டு வருகிறது.