சமீபகாலமாக அதிமுகவுக்குள் உள்கட்சி பூசல் கடுமையாக எழுந்துள்ளது. எம்எல்ஏ ராஜன் செல்லப்பா வீசிய பந்து "கட்சிக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்பது" அதன் தொடர்ச்சியாகவே குன்னம் எம்எல்ஏ ஆதரவு கருத்தை கூற இதுதான் தமிழகத்திலுள்ள அதிமுக தொண்டர்களின் உணர்வாக உள்ளது என பல ஊர்களிலும் விவாதங்கள் வெடித்தது. இதைத் தடுக்கும் விதமாக இந்த கூட்டத்தை நடத்தினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
இதில் தொட்டியம் தொகுதி முன்னாள் எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான சிவபதி எழுந்து நின்று "சொல்லுங்க ஏன் எங்க கருத்த பேசக் கூடாதுன்னு சொல்றீங்க... என்ன காரணம் சொல்லுங்க நான் நிறைய பேச வேண்டி இருக்குது இங்க பேசாம எங்க பேசுவேன்..? என ஆவேசமாக கூற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எழுந்து உங்ககிட்ட இருக்கிற விஷயம் சரியாக இருந்தாலும் தவறாக இருந்தாலும் இப்போது இங்கு பேச வேண்டாம் நீங்க பேசினால் பலபேர் பேசுவாங்க நம்ம கட்சிக்கு வெளியில அவப்பேரு ஏற்படக் கூடாது என்ற நல்ல நோக்கத்துக்காக தான் கூறுகிறேன் சிவபதி தயவுசெய்து அமருங்கள் என கூறி அவரை அமர வைத்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
இதேபோல் பல எம்எல்ஏக்கள் தலையை தூக்கி பேசுவதற்காக முயற்சி செய்தபோது கையை உயர்த்தி அவர்களை அமருமாறு சைகை மூலம் கூறி அவர்களை அமர வைத்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.