சட்ட பூர்வமாக எந்தத் தடையும் இல்லாததால், வேளாண் நிலங்களில் உள்ள கட்டிடங்களில் விதிகளைப் பின்பற்றி டாஸ்மாக் கடைகளை அமைக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. ஈரோடு மாவட்டம், பவானி தாலுகாவில் உள்ள மயிலம்பாடி கிராமத்தில் விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த டாஸ்மாக் கடையை மூட உத்தரவிடக் கோரி அப்பகுதியைச் சேர்ந்த மல்லசாமி நாச்சிமுத்து என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
இதை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி சாஹி தலைமையிலான அமர்வு, மது வியாபாரம் ஒரு அருவருப்பான வர்த்தகம் எனத் தெரிவித்தது. அதேசமயம், வேளாண் நிலங்களில் டாஸ்மாக் கடைகளை அமைக்க எந்தச் சட்டமும் தடை செய்யாத நிலையில், விதிகளைப் பின்பற்றி கடைகளை அமைக்க அனுமதியளித்து உத்தரவிட்டது.
Show comments