ADVERTISEMENT

அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனனின் மனைவி காலமானார்!

03:32 PM Apr 19, 2021 | rajavel

ADVERTISEMENT

ADVERTISEMENT

அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சென்னை ஆர்.கே.நகர் தொகுதியைச் சேர்ந்த மதுசூதனன், 2021 சட்டமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக ஏப்ரல் 6ஆம் தேதி மாலை மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் வாகனத்தில் அழைத்து வரப்பட்டிருந்தார்.

அவரும், உடன் இருந்த செவிலியர்களும் கரோனா உடை அணிந்திருந்தனர். ஸ்ட்ரெட்சரில் படுத்தபடியே ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்து இறக்கப்பட்டு, வாக்குச்சாவடிக்கு உள்ளே சென்று வாக்களித்துவிட்டு மீண்டும் அதே வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது ஆர்.கே.நகர் தொகுதி அதிமுக வேட்பாளரான ஆர்.எஸ்.ராஜேஷ் மற்றும் மதுசூதனன் மனைவி மதுசூதனன் ஜீவா ஆகியோர் வாக்குப்பதிவு மையத்தில் உடனிருந்தனர்.

இந்தநிலையில், உடல்நலக்குறைவு காரணமாக மதுசூதனன் மனைவி இன்று காலமானார். மதுசூதனன் மருத்துவமனையில் இருக்கும்போது அவரது மனைவி காலமானது அவர்களது உறவிர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மதுசூதனன் மனைவி ஜீவா மறைவு செய்தி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர்கள் இரங்கல் அறிக்கை வெளியிடுவார்கள் என கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT