ADVERTISEMENT

அத்திவரதரை தரிசனம் செய்ய நாளை மறுநாள் தமிழகம் வருகிறார்- பிரதமர் நரேந்திர மோடி!

11:32 AM Jul 29, 2019 | santhoshb@nakk…

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக ஜூலை 31 ஆம் தேதி தமிழக வருகிறார். அதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வருகை தரும் பிரதமர் மோடி, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதரை தரிசனம் செய்கிறார். அன்றைய தினம் இரவு கிண்டி ஆளுநர் மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடி தங்குகிறார். பிரதமருடன் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங் ஆகியோரும் அத்திவரதரை தரிசனம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இதையொட்டி காஞ்சிபுரத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஜூலை 31- ஆம் தேதி, அத்திவரதரை சயன கோலத்தில் தரிசனம் செய்யும் பிரதமர் மோடி, ஆகஸ்ட் 1- ஆம் தேதி, நின்ற கோலத்திற்கு அத்திவரதரையும் தரிசனம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இரண்டாவது முறையாக பதவியேற்ற பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்திற்கு வருகை தருவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT