ADVERTISEMENT

'கமல்ஹாசன் கட்சியை நடத்துவது ஐயம்'- நமது அம்மா!

08:28 AM Dec 12, 2019 | santhoshb@nakk…

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் எதிர்காலத்தில் கட்சியை நடத்துவது ஐயம் தான் என்பதை மக்கள் நீதி மயத்தின் உள்ளாட்சித் தேர்தல் புறக்கணிப்பு அறிக்கை உணர்த்துவதாக நமது அம்மா நாளிதழ் விமர்சனம் செய்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

நமது அம்மா நாளிதழில் "கிராமசபை நடத்துகிறேன் என்று ஏக பில்டப்போடு கட்சியை தொடங்கிய கமல்ஹாசன் யதார்த்தத்தை உணராத சினிமா கதாநாயகனா, முதல் காட்சியில் ஆசைப்பட்டு, மூன்றாவது காட்சியில் கைக்கு அகப்பட்டு விடுகிற கற்பனை நாற்காலியாக முதலமைச்சர் இருக்கையை கணக்கு போட்டுவிட்டார்.


உள்ளாட்சித் தேர்தலை புறக்கணித்துவிட்டு பின்னங்கால் பிடரியில்பட கமல்ஹாசன் ஓடுகிறார் என்றால், அது அடுத்தவர் மீது குற்றங்களை அடுக்கினால் அதிகார இருக்கை தனக்காகிவிடும் என்று நினைப்பவர்களுக்கு தக்க பாடம். கமல்ஹாசன் எதிர்காலத்தில் கட்சியை நடத்துவது ஐயம் தான் என்பதை உள்ளாட்சித் தேர்தல் புறக்கணிப்பு அறிக்கை உள்ளங்கை நெல்லிக்கனியாக உணர்த்துகிறது" என்று நமது அம்மா நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT