ADVERTISEMENT
ADVERTISEMENT
கோவையில் பெண் ஒருவர் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அம்மன்குளம் பகுதியில் 34 வயது பெண் ராதா என்பவரின் முகத்தில் மர்ம நபர்கள் ஆசிட் வீசி விட்டு தப்பித்து சென்றனர். ஆசிட் வீச்சில் படுகாயமடைந்த ராதா கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தருமபுரியைச் சேர்ந்த ராதா கணவரை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்துவந்த நிலையில் மர்ம நபர்களால் இந்த ஆசிட் வீச்சு சம்பவம் நிகழ்ந்துள்ளது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Show comments