ADVERTISEMENT
ADVERTISEMENT
புதுக்கோட்டை திருமயம் அருகே வேனும் கண்டெய்னர் லாரியும் மோதிய விபத்தில் 7 பேர் பலியாகியுள்ளனர்.
புதுக்கோட்டை திருமயம் அருகே வேனும் கண்டெய்னர் லாரியும் மோதியது. இந்த விபத்தில் இருந்து மீட்கப்பட்டவர்களை திருமயம் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் திருமயம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தற்போது 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் 10 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆந்திராவை சேர்ந்தவர்கள் கோவில் வழிபாட்டிற்காக வந்து வேனில் திரும்பிய நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் கண்டெய்னர் லாரி தவறான பாதையில் வந்ததே இந்த விபத்திற்கு காரணம் எனவும் தகவல்கள் வந்துள்ளது.
ADVERTISEMENT
Show comments