Skip to main content

கார் - சரக்கு வேன் மோதல்; ஒருவர் உயிரிழப்பு; வெள்ளி வியாபாரிகள் உட்பட 4 பேர் படுகாயம்

Published on 03/06/2023 | Edited on 03/06/2023

 

 Car - Cargo Van Collision; One person was lost their live; 4 people, including silver merchants, were seriously injured

 

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள கொண்டிகுளம் கிராமத்தைச் சேர்ந்த மணிவேல் மகன் அரவிந்த் (வயது30) ஓட்டிச் சென்ற சரக்கு வேன் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் இருந்து கைகாட்டி நோக்கி போகும் போது திடீரென ஸ்டியரிங் இணைப்பு துண்டிக்கப்பட்டு முன்பக்க சக்கரங்கள் தாறுமாறாக ஓடி வேகமாக திரும்பிய போது பின்னால் வந்த கார் மோதியது.

 

இந்த விபத்தில் காரில் சென்ற சேலத்தைச் சேர்ந்த வெள்ளி வியாபாரிகள் பைசல் (வயது43), அவரது மகன் பர்ஹான் (வயது14), மணிகண்டன் (வயது43) ஆகியோர் காயமடைந்தனர். மேலும் கார் ஓட்டுநர் பூவரசக்குடி குணசேகரன் மகன் வெங்கடேசன் (வயது 24) மற்றும் சரக்கு வேன் ஓட்டுநர் அரவிந்த் ஆகியோர் படுகாயம் அடைந்து வாகனங்களின் இடிபாடுகளில் சிக்கித் தவித்தனர்.

 

இவர்களை உள்ளூர் இளைஞர்கள் மற்றும் கீரமங்கலம் தீயணைப்பு வீரர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ்கள் மூலம் கீரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காரில் இருந்த வெள்ளி பொருட்களை கைகாட்டியை சேர்ந்த ஒரு நகைக்கடைக்காரரிடம் ஒப்படைத்தனர்.

 

இதில் கார் ஓட்டுநர் வெங்கடேசன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 4 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து கீரமங்கலம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

புதுக்கோட்டையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் எம்.குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரை மகள் விசித்ரா (வயது 14). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக தேர்தலுக்காக சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி விசித்ரா தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இரைதேடிச் சென்றவர் ஒரு கருவேலமரத்தடியில் கொட்டிக்கிடந்த கருவேலங்காய்களை சேகரித்த போது கீழே இருந்த பாம்பு விரலில் கடித்துள்ளது.

பாம்பு கடித்து அலறிய சிறுமியை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாம்பின் விஷம் வேகமாக உடலில் பரவியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவி விசித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

Next Story

சாலை விபத்து; பரிதாபமாகப் பிரிந்த உயிர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Hotel worker passed away in road accident near Modakurichi

ஈரோடு, என்.ஜி.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் சரவணன் (48). திருமணமாகவில்லை. இவரது பெற்றோர் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டனர். கரூர் ரோட்டில், சோலார் அருகே உள்ள ஓட்டல் ஒன்றில் சரவணன் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு சரவணன், தான் வேலை பார்க்கும் ஓட்டலுக்கு சொந்தமான பைக்கை எடுத்துக் கொண்டு, கரூர் ரோட்டில் உள்ள பரிசல் துறை நால்ரோட்டில் இருந்து, கொக்கராயன் பேட்டை நோக்கி சென்றுள்ளார். அப்போது, காவிரி பாலத்துக்கு முன்பாக, எதிரில் வந்த ஸ்கூட்டர் எதிரிபாரதவிதமாக சரவணன் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதையடுத்து, அங்கிருந்தவர்கள், சரவணனை மீட்டு, ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சரவணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்