ADVERTISEMENT
தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து பெரியாறு, திருமங்கலம் பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வைகை அணையை திறந்து வைக்க உத்தரவிட்டதை அடுத்து துணை முதல்வர் ஓபிஎஸ் அணையை திறந்து வைத்தார். அமைச்சர் செல்லூர் ராஜு உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
ADVERTISEMENT
71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 69 அடி நிறைந்துள்ளது. 7 ஆண்டுகளுக்கு பின்னர் வைகை அணை நிரம்பிய நிலையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 1லட்சத்து 502 ஏக்கர் பாசன வசதி பெறும் வகையில் வைகை அணையில் நீர் திறக்கப்பட்டுள்ளது. வைகை அணையில் இருந்து 120 நாட்களுக்கு நீர் திறந்துவிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
Show comments