Skip to main content

வைகை அணை வனவியல் கல்லூரியில் நடக்கும் மர்மம் என்ன? பீதியை கிளப்பும் 6 கோடி டெண்டர்!

Published on 01/02/2020 | Edited on 01/02/2020

ஆண்டிபட்டி - வைகை அணை அருகில் உள்ள தமிழ்நாடு வனவியல் பயிற்சி கல்லாரியில் நடந்த ஆறு கோடி டெண்டரின் மர்மம் என்ன? என்ற பீதி காண்ட்ராக்டர்களிடமும் பொதுமக்களிடையே புகார் எழுந்துள்ளது. 

தேனி மாவட்டதில் உள்ள ஆண்டிபட்டி அருகே இருக்கும் வைகை அணை அருகில் வனவியல் பயிற்சி கல்லூரி கடந்த 1961 ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் கட்டிடம் கட்டுதல், பஸ்கள் வாங்குதல் உள்ளிட்டவைகளுக்காக ஆறு கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான டெண்டர் கடந்த மாதம் நடைபெற்றது. ஆனால் நடை பெற்ற டெண்டர் முறையாக நடைபெறவில்லை என்றும், பெயர் அளவிற்கு மட்டுமே பி.ஆர்.ஓ. அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் அவ்வாறு, அரசு நாளிதழில் டெண்டர் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தால் குறிப்பிட்டக்கால இடைவெளியில் ஆன்லைன் டெண்டர் மூலமாகவோ (அ) சீல் இடப்பட்ட உரையில் ஒப்பந்தபுள்ளிகள் கோரப்பட வேண்டும் என்பது அரசு விதி.

 

 What is the mystery of the Vaigai Dam Forest College? 6 crores tender

 

ஆனால் இதில் எதுவுமே கல்லூரி முதல்வர் முறையாக பின்பற்றவில்லை என்றும், நேர்மையான முதல்வராக இருந்தும் அவருக்கு கீழ் பணிபுரியும் சில அதிகாரிகள் செய்யும் ஊழல்களை ஏன்? தடுக்கவில்லை. இதனால் கல்லூரி முதல்வருக்கும், வனவருக்கும் மறைமுகமாக ஏதோ உள்ளதாக புகார் தெரிவித்து உள்ளனர்.

இது சம்பந்தமாக அப்பகுதி மக்களிடம் கேட்டபோது, நேர்மையாக பணிபுரிவதாக கூறிக்கொள்ளும் கல்லூரி முதல்வர், ஏன்? இங்கு பணிபுரியும் வனச்சரகரின் உறவினருக்கு பினாமி பெயரில் டெண்டர் வழங்க அனுமதிக்க வேண்டும். முதல்வருக்கு தவறு என்று தெரிந்தும் ஏன்? அந்த வனசரகர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதில் முதல்வருக்கும் வனச்சரகருக்கும் ஏதும் மறைமுக பிரச்சனை உள்ளதா? இதனை அரசு  விசாரித்தால் பல உண்மைகள் வெளிவரும். அப்படி விசாரித்தால் வனச்சரகர்தான், கல்லூரியில் உள்ள அனைத்து வேலைகளையும், ஆட்கள் வைத்து செய்வது தெரியவரும். மேலும் சில வேலைகளை செய்யும் போதும் பொருட்கள் வாங்கும் போதும்  போலி பில்கள் தயாரித்து பணம் வாங்கியதும் தெரிய வரும். இதற்கு கருவூலத்தில் உள்ள பைல்களே சாட்சி.மேலும் நேரடி நியமன வனவர்களிடம் பயிற்சியின் போது ஒவ்வொரு நபரிடமும் தலா ரூ 10 ஆயிரம் வசூல் செய்துள்ளனர். அதற்கு முறையான கணக்குகள் தராமல் பயிற்சி முடிவின் போது சிறிது பணமே கொடுத்தாக பயிற்சி முடித்த வனவர்கள் புலம்பிச் சென்றனர். மேலும் ஒப்பந்த தாரர்களிடம் முன் கூட்டியே பேசி ஏன் டெண்டர் விட வேண்டும்? இதுதான் நேர்மையா?

டெண்டர் நடவடிக்கைகள் அனைத்தும் கைவிடப்பட வேண்டும். ஒழிவு மறைவு இல்லாத டெண்டர் வேண்டும். உள்ளே பணிபுரியும் யாரும் பினாமி பெயரில் டெண்டர் எடுத்து பணிகள் செய்ய கூடாது. இதில் எதுவும் பின்பற்றவில்லை என்றால் முதல்வர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நேரடி நியமன வனவர்கள் பயிற்சியில் மதுரையை சேர்ந்த பயிற்சி வனவர் ஒருவர் கல்லூரி விடுதியிலே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காரணம் குரூப்-2 தேர்வில் தோல்வி பெற்றதால் தற்கொலை என கூறப்பட்டாலும் அதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை.

கல்லூரியில் விடுமுறை தராமல் தொடர்ச்சியாக நெடுந்தூர பயணத்திற்கு லாயக்கற்ற ,ஒரு சுவாரஜ் மஸ்தா வாகனத்தில் தமிழ்நாடு முழுவதும் களக் கல்வி பயணம் கொடுத்ததால் வனத்துறையை விட்டு வெளியே தம்பித்து வர வேண்டும் என உறுதியாக இருந்துள்ளார். அந்த வனவர் மன உளைச்சல் ஏற்பட்டு இறந்ததாக அவருடன் பயின்ற வனவர்கள் தற்போது தெரிவிக்கன்றனர்.

முதல்வர், மாவட்ட கலெக்டரிடம் நன்கு  பழக்கம் வைத்து உள்ளதால், கல்லூரி நிர்வாகம் சம்மந்தமாக, அவரிடம் புகார் தந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது என்று நினைக்கிறாரோ? என்று தெரியவில்லை என தெரிவித்தனர். இப்படி ஆண்டிபட்டி வனவியல் பயிற்சி கல்லூரி யில் நடந்து வரும்  முறைகேடுகளை கண்டுபிடித்து வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நடவடிக்கை எடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“டீ குடிப்பவன் கூட அவரைத் திரும்பி பார்க்கவில்லை” - வேட்பாளர் சரவணனை ஆதரித்து செல்லூர் ராஜு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Sellur Raju supporting candidate Saravanan and critcizing amitshah

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தி வருகின்றன.

அந்த வகையில், மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பாக மருத்துவர் சரவணன் போட்டியிடுகிறார். இந்த நிலையில், மதுரையில் வசிக்கும் வட மாநிலத்தவர்களிடம் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வாக்கு சேகரித்தார். அப்போது, ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் அணிவிக்கும் தலைப்பாகையோடு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, வேட்பாளர் சரவணன் ஆகியோர் வாக்கு சேகரித்தனர்.

இதனைத் தொடர்ந்து, செல்லூர் ராஜு, அதிமுக வேட்பாளர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது செல்லூர் ராஜுவிடம், “அதிமுகவும், திமுகவும் மாறி மாறி ஊழல் செய்துவிட்டதாக அமித்ஷா கூறியிருக்கிறாரே? எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த செல்லூர் ராஜு, “அமித்ஷா ஏதோ பேச வேண்டும் என்பது போல் பேசுகிறார். திராவிட இயக்கங்கள் 1967-ல் ஆட்சிக்கு வந்தது. அன்றைக்கு மத்தியில் ஆளுகின்ற காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டு மக்களை எலிக்கறி சாப்பிட வேண்டும் என்றும் ஒரு வாரத்தில் ஒரு நாள் விரதம் இருக்க வேண்டும் என்றும் கூறினார்கள். மாணவர்கள் படிக்கின்ற விடுதிகளில் கூட மாணவர்களுக்கு ஒரு வேளை சாப்பாடு கிடையாது. ஏனென்றால் உணவு பற்றாக்குறை.

இந்த மாதிரி நிலைமை எல்லாம் அப்போது இருந்தது. மொழியாலும், கலாச்சாரத்தாலும் தமிழ்நாடு தனித்துவம் பெற்றதன் அடிப்படையில், பேரறிஞர் அண்ணா தான் தமிழ்நாடு என்று பெயர் வைத்தார். தமிழ்நாடு என்று பெயர் வைத்ததற்கு பிறகு திராவிட இயக்கங்கள் தான் தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது. இந்த திராவிட இயக்கங்கள் தான் ஏழை எளிய மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் செயல்படுத்துகிற திட்டங்களைத் தான் பிற மாநிலங்களில் பின்பற்றுகிறார்கள். அம்மா உணவகம் ஆந்திரா, தெலுங்கானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது

தமிழ்நாட்டில் தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. சிறு, குறு தொழில்களில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதல் மாநிலமாக இருக்கிறது. இங்கே வருகிற நிதியில் தான் குஜராத், பீகார் போன்ற மாநிலங்களுக்கு நிதி தருகிறார்கள். எங்கள் ஆட்சியில் ஊழல் நடக்கவில்லை. ஊழலுக்காக திமுக ஆட்சி தான் கலைக்கப்பட்டது. அவர் உண்மையாக எங்களை பற்றி குறை சொல்லவில்லை. தி.மு.க பற்றி குறை சொல்ல வேண்டும் என்பதற்காக இப்படி மாற்றி சொல்லி இருக்கிறார். மதுரையில் அமித்ஷா ரோட் ஷோ நடத்தினார். ஆனால் பாவம் அங்கு டீ குடிப்பவன் கூட அவரைத் திரும்பி பார்க்கவில்லை. அவர் மட்டுமே கை காட்டிக் கொண்டு போனார்” என்று பேசினார்.

Next Story

‘பகல் 12 முதல் 3 வரை வெளியே வர வேண்டாம்’ - மதுரை மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Advice to Madurai people Don't come out between 12 noon and 3 am

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. 

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்ட மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “வெயில் அதிகரிப்பு காரணமாக மதுரையில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம். வெயில் தாக்கம் மற்றும் அனல்காற்று அதிகமாக வீசுவதால் மக்கள் முன்னெச்சரிக்கயாக இருக்க வேண்டும்.

அதாவது, வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்கக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் அருந்த வேண்டும். அவசர கால தேவைகளுக்கு 1077 மற்றும் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.