7 தமிழர் விடுதலை குறித்த தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தை ஏற்று எழுவரையும் உடனடியாக விடுதலை செய்ய ஆளுநரை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கடந்த 10 - 11- 2018, அன்று சிவகங்கையில் மிதிவண்டி பேரணி தொடங்கியது. சிவகங்கையில் இந்த பேரணியை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் துவங்கி வைத்தார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
இந்த மிதிவண்டி பேரணி இன்று காலை சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையை வந்தடைந்தது. இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், மதிமுகவின் மல்லை சத்யா, தனியரசு எம்எல்ஏ, அமமுகவின் செந்தமிழன், மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி, பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் மனித உரிமை அமைப்பைச் சேர்ந்தவர்கள் வரவேற்றனர்.
Show comments