ADVERTISEMENT

7 பேர் விடுதலை... இன்று ஆளுநர் முடிவெடுக்க வாய்ப்பு?

12:36 PM Jan 29, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக இன்று (29.01.2021) அல்லது நாளை ஆளுநர் முடிவெடுப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக சட்டப்பேரவையில் கடந்த 2018-ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆன பின்னரும் இதுகுறித்து தமிழக ஆளுநர் முடிவெடுக்காத நிலையில் கடந்த வாரம், ஒரு வாரத்தில் இதுகுறித்து முடிவெடுக்க ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தியிருந்தது. அதன்படி இன்று அல்லது நாளை 7 பேர் விடுதலை தெடர்பாக ஆளுநர் முடிவெடுப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT