தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,
ADVERTISEMENT
ADVERTISEMENT
தமிழகத்தில் மேலும் 86 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே தற்போது தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 485 இருந்த நிலையில், 571 ஆக அதிகரித்துள்ளது. 90 ஆயிரத்து 824 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர். புதியதாக தொற்றுள்ள 86 பேரில் 85 பேர் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள். 127 பேர் அரசு கண்காணிப்பில் உள்ளனர்.
கரோனா மூன்றாம் இடத்திற்கு செல்லக்கூடாது என ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும். கரோனா பாதிப்பிலிருந்து 8 பேர் தற்போது வரை தமிழகத்தில் குணமடைந்துள்ளனர். துபாயில் இருந்து திரும்பிய ஒருவருக்கு கரோனா பாதிப்பு உள்ளது. கரோனா பரவலை தடுக்க அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கூறினார்.
கரோனா மூன்றாம் இடத்திற்கு செல்லக்கூடாது என ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும். கரோனா பாதிப்பிலிருந்து 8 பேர் தற்போது வரை தமிழகத்தில் குணமடைந்துள்ளனர். துபாயில் இருந்து திரும்பிய ஒருவருக்கு கரோனா பாதிப்பு உள்ளது. கரோனா பரவலை தடுக்க அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கூறினார்.
Show comments