ADVERTISEMENT

மார்ச் மாதத்தில் 44.67 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்!

10:50 AM Apr 01, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த மார்ச் மாதத்தில் 44.67 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ இரயில் பயணிகளுக்கும் ஒரு நம்பகமான பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது.

01/01/2022 முதல் 31/01/2022 வரை மொத்தம் 25,19,252 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். 01/02/2022 முதல் 28/02/2022 வரை மொத்தம் 31,86,653 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். 01/03/2022 முதல் 31/03/2022 வரை மொத்தம் 44,67,756 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

அதிகபட்சமாக 28/03/2022 அன்று 2,10,634 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். மார்ச் மாதத்தில் மட்டும் க்யூஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 3112,845 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். மேலும், பயண அட்டை பயணச்சீட்டு (Travel Card Ticketing System) முறையைப் பயன்படுத்தி 26,37,348 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மெட்ரோ இரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யூஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டில் 11/09/2020 முதல் 20% கட்டணத் தள்ளுபடி வழக்கம் போல் வழங்கி வருகிறது. மெட்ரோ இரயில் பயண அட்டைகளை (Travel Card) பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு 22/02/2021 முதல் 20% கட்டணத் தள்ளுபடி வழங்கப்படுகிறது." இவ்வாறு மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT