ADVERTISEMENT

சென்னையில் 44 மின்சார ரயில்கள் ரத்து!

08:10 AM Feb 18, 2024 | prabukumar@nak…

சென்னையில் 44 மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

சென்னை கோடம்பாக்கம் - தாம்பரம் இடையேயான மின்சார ரயில் வழித்தடத்தில் தண்டவாள பராமரிப்பு மற்றும் என்ஜினீயரிங் பணி இன்று (11.02.2024) காலை 11 மணி முதல் மாலை 3.15 மணி வரை நடைபெற உள்ளது. இதனால் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே சுமார் 04.15 மணி நேரம் மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் பயணிகளின் வசதிக்காக தாம்பரம் செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனவும் ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தெற்கு ரயில்வே அறிவிப்பின்படி, சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் 15 ரயில்கள், சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் 6 ரயில்கள், சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணம் செல்லும் ஒரு ரயிலும், தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் 15 ரயில்கள், செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை, செல்லும் 5 ரயில்கள், காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் ஒரு ரயிலும், திருமால்பூரில் இருந்து சென்னை கடற்கரை இடையே இயக்கப்படும் ஒரு ரயிலும் என மொத்தம் 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT