ராஜபாளையத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு மருத்துவரின் கணவர் சிமென்ட் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். 60 வயதைக் கடந்த அவருக்கு கரோனா அறிகுறி உறுதி செய்யப்பட்டு, மதுரை அரசு மருத்துவமனை கரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ADVERTISEMENT
அந்த நபர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தகவலை, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் கரோனா பாதிப்புக்கு ஆளானவர்களில், இவர் 41-வது நபர் ஆவார். தற்போது தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments