ADVERTISEMENT
கரோனா தொற்று சமீபமாக அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் தினசரி 1000 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் மாஸ்க் அவசியம் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சென்னை மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த.வேலு உள்ளிட்டோர் இன்று (29.6.22) சென்னை மயிலாப்பூர் பகுதியில் தொடர்ந்து 4 மணி நேரம், 50,000 முகக் கவசங்கள் இலவச விநியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments