ADVERTISEMENT
தமிழ்நாடு அரசு, இந்து சமய அறநிலையத்துறை சென்னை மாவட்ட திருக்கோயில்கள் சார்பில் 34 ஜோடிகளுக்கு இன்று திருமணம் நடத்தி வைக்கும் நிகழ்வு நடந்தது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு திருமணங்களை நடத்தி வைத்தார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் பொன்முடி, சேகர்பாபு, செஞ்சி மஸ்தான், மா. சுப்பிரமணியன் மற்றும் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் தா. வேலு, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன், அரசு முதன்மைச் செயலர் மணிவாசன், சென்னை மாநகர மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments