ADVERTISEMENT
ADVERTISEMENT
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்குப் படகு மூலம் கடத்த முயன்ற 3 டன் பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஆறு பேரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கடலோர காவல்படையினர் ரோந்து சென்றபோது, நாட்டுப்படகை மறித்து சோதனையிட்டதில் பல லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளைக் கடத்திச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Show comments