Skip to main content

போதையில் டார்ச்சர் செய்த மகனை துண்டுதுண்டாக வெட்டிக் கொன்ற தாய்-தேனியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

Published on 18/02/2020 | Edited on 18/02/2020

கம்பம் அருகே துண்டுதுண்டாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட வாலிபர் கொலை வழக்கில் தாயை போலீசார் கைது செய்தனர்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளிப்பட்டி சாலையில் பொட்டம்மன் துறையில் முல்லைப்பெரியாறு செல்லும் பகுதியில் சரக்கு மூட்டையில் வாலிபர் உடல் தலை, கை, கால்கள் இல்லாமல் கிடந்தது. இதுகுறித்து கம்பம் தெற்கு போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் நேற்று இரவு முன்தினம் ஒரு பெண்ணும் ஒரு வாலிபரும் சாக்குமூட்டையில் கொலை செய்யப்பட்டவரின் உடலை வீசி சென்றது தெரியவந்தது.

 

theni incident

 

அப்பகுதியில் பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அந்தப் பெண்  நந்தகோபாலன்சாமி தெற்குவாசல் தெருவைச் சேர்ந்த ராஜா மனைவி செல்வி என்பதும், அவருடன் வந்தது அவரது இரண்டாவது மகன் விஜய் பிரசாத் என தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் செல்வியிடம் விசாரணை நடத்தியதில் தான் கொலை செய்ததை ஒத்துக் கொண்டார்.

இதுகுறித்து போலீஸார் சிலர் கூறுகையில்..... மகனை கொலை செய்த செல்வியின் கணவர்  ராஜா. கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதன் பிறகு செல்வி தனது இரண்டு மகன்களான விக்னேஸ்வரன் விஜய் பிரசாத் ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். விக்னேஸ்வரன் என்ஜினீயரிங் பட்டதாரி. மேலும் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். போதை பழக்கத்திற்கு அடிமையானதால் இரண்டு முறை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அதன் பிறகு தனது சொந்த தேவைக்கும் பழக்கத்துக்கும் திருட்டு தொழிலிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இது மட்டுமின்றி தவறான நண்பர்களுடன் பழக்க வழக்கமும் இருந்தது இதனால் தினமும் வீட்டில் தனது தாயிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதன்காரணமாக அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் யாரும் இவர்களுடன் பேசுவதை தவிர்த்து வந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு விக்னேஸ்வரனின் தம்பி விஜய பிரசாத் காதல் திருமணம் செய்துள்ளார். தனது மனைவியுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். தனக்கு திருமணமாகாத நிலையில் தனது தம்பி திருமணம் செய்து கொண்டதால் தன்னை அவமதித்து விட்டதாக விக்னேஸ்வரன் நினைத்தார். இதனால் தம்பியிடமும் தாயிடமும் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். 

இந்த  நடவடிக்கை பார்த்த விஜய் பிரசாத்தின் மனைவி அவரது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் தனது மகனை கொலை செய்ய செல்வி முடிவு செய்தார். அதன்படி நேற்று முன்தினம் போதை தலைக்கேறிய நிலையில் வந்த விக்னேஸ்வரனுக்கு சாப்பாடு கொடுத்துள்ளார். அந்த உணவில் விஷம் கலந்துகொடுத்து மகனை கொன்றுள்ளார். அதன்பிறகு தனது மனதை கல்லாக்கிக் கொண்டு பெற்ற மகன் என்றும் பாராமல் அவரது உடலின் ஒவ்வொரு பாகங்களையும் அரிவாளால் வெட்டி தனித்தனியாக எடுத்தார். உடலை மட்டும் சாக்குப்பையில் கட்டி தொண்டமாந்துறை தடுப்பணையில் வீசியுள்ளார். முன்னதாக தலையை வீரப்ப நாயக்கன் குளம் அருகில் உள்ள கிணற்றிலும் கை மற்றும் கால்களை காந்தி நகருக்கு அருகில் உள்ள கிணற்றில் வீசி சென்று உள்ளார்.

அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில்  நேற்று இரவு போலீசார் மீட்டனர். ஆனால் கைகள் மற்றும் கால்களை தேடிப் பார்த்தபோது கிடைக்கவில்லை இரவு நேரம் ஆகிவிட்டதால் உடல் பாகங்களை தேடுவதை நிறுத்தி விட்டு இரண்டாவது நாளாக போலீசார் தேடி வருகின்றனர். மேலும் செல்வி கொடுத்த தகவலின் அடிப்படையில் இந்த கொலையில் உடல் பாகங்களை மறைக்க மேலும் இரண்டு பேர் உடந்தையாக இருந்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே செல்வியின் இரண்டாவது மகன் விஜய பிரசாத் செல்வியின் அண்ணன் ஆகியோரும் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது எனவே போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் என்றனர்.

மேலும் போதை பழக்கத்திற்கு அடிமையான மகனை வெட்டி கொன்று விட்டு, உடலின் பாகங்களை துண்டு துண்டாக வெட்டும் அளவிற்கு  செல்வி  துணிந்தது ஏன்? போதைப் பழக்கம் மட்டுமின்றி வேறு ஏதேனும் தவறான பழக்கத்துக்கு விக்னேஸ்வரன் ஆளானாரா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இப்படி பெற்ற மகனையே தாய் கொடூரமாக வெட்டிக் கொன்று உடலை துண்டு துண்டாக வீசி சென்ற சம்பவம் தேனி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Next Story

ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி; பகீர் கிளப்பும் பின்னணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
wife who incident her husband along with her boyfriend

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே வசிப்பவர்கள் ஸ்ரீகாந்த் - ஆர்த்தி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் ஆர்த்திக்கு ஸ்ரீகாந்தின் நண்பர் இளையராஜாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த பழக்கம் திருமணத்தை மீறிய உறவாக மாறி உள்ளது.

இது குறித்த தகவல் ஸ்ரீகாந்துக்கு தெரிய வர இருவரையும் அழைத்து கடுமையாக எச்சரித்துள்ளார். இந்த நிலையில் திருமணத்தை மீறிய உறவிற்கு இடையூறாக இருக்கும் கணவன் ஸ்ரீகாந்தை கொல்ல இளையராஜாவுடன் ஆர்த்தி திட்டமிட்டுள்ளார்.  அதன் படி கடந்த 2021 ஆம் ஆண்டு தேவகோட்டை அருகே உள்ள அருகே உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதிக்கு இளையராஜா ஸ்ரீகாந்தை அழைத்துச் சென்று மது குடிக்க வைத்து அவரை வெட்டிக்கொன்று புதைத்துள்ளார். ஆனால் மனைவி ஆர்த்தி தனது கணவர் குடும்ப பிரச்சனை காரணமாக கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாக குடும்பத்தாரிடமும் அக்கம்பக்கத்தினரிடமும் நாடகமாடி உள்ளார்.

இந்த நிலையில் இரண்டரை வருடம் கழித்து ஸ்ரீகாந்த் கொலை செய்யப்பட்டது குறித்த தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதன் பெயரில் விசாரணையை தொடங்கிய போலீஸ் மனைவி ஆர்த்தியையும், இளையராஜாவையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் இளையராஜாவின் நண்பர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரையும் கைது செய்தனர். மேலும் இந்தக் கொலை தொடர்பாக தலைமறைவாக இருக்கும் இருவரை போலீஸ் தேடி வருகின்றனர்.