ADVERTISEMENT
தமிழ்நாட்டு மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிக்கக் கூடிய குடும்பங்கள் என 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்புடன் ரூ.1000 ரொக்கம் ஆகியவை பொங்கல் பரிசாக தமிழக அரசால் இந்த ஆண்டு வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ரேஷன் கடை ஒன்றில் தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பினை பொதுமக்கள் வரிசையில் வந்து வாங்கிச் செல்கின்றனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments