ADVERTISEMENT

3 மணி நேரத்தில் 2 கோடி ரூபாய்... களைகட்டிய உளுந்தூர்பேட்டை ஆட்டு சந்தை!

09:39 AM Jul 14, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வாரச்சந்தை ஆடு விற்பனைக்கு மிகவும் பிரபலமானது. இச்சந்தையில் அதிகபட்சம் 25 லட்சம் முதல் 50 லட்சம் ரூபாய்வரை விற்பனை நடைபெறும். இந்நிலையில், இன்று (14.07.2021) மூன்று மணிநேரத்தில் மட்டும் 2 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளன.

அடுத்த வாரம் பக்ரீத் பண்டிகை என்பதால் சந்தையில் ஆடு விற்பனை களைகட்டியது. காலை 7 மணிக்குத் தொடங்கிய சந்தைக்குப் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் ஆயிரக்கணக்கான ஆடுகளை வாங்கிச் சென்றனர். 8 ஆயிரம்முதல் 15 ஆயிரம்வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT