Skip to main content

அப்பாவி பெண்ணை ஏமாற்றி 56 ஆயிரம் அபேஸ்; ஏடிஎம்மில் பணம் எடுக்க உதவி கேட்டவருக்கு நேர்ந்த சோகம்

Published on 18/11/2022 | Edited on 18/11/2022

 

 56 thousand Abes cheated an innocent woman; Tragedy befell the person who asked for help to withdraw money from the ATM

 

ஏடிஎம்மில் பணம் எடுத்துத் தரும்படி உதவி கேட்ட அப்பாவி பெண் ஒருவரை ஏமாற்றி இளைஞர் ஒருவர் 56,000 ரூபாயைத்  திருடிச் சென்ற சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நிகழ்ந்துள்ளது.

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள ஸ்டேட் பேங்க் ஏடிஎம் ஒன்றில் செங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வி  என்பவர் ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்றுள்ளார். அவருக்கு ஏடிஎம் கார்டை பயன்படுத்தத் தெரியாததால் அங்கிருந்த இளைஞர் ஒருவரிடம் உதவி கேட்டுள்ளார். இளைஞரும் உதவி செய்வதாக அவரிடமிருந்து ஏடிஎம் கார்டை பெற்று பணம் எடுக்க முயன்றுள்ளார். ஆனால் இந்த ஏடிஎம்மில் பணம் வரவில்லை எனத் தெரிவித்துவிட்டு கலைச்செல்வியிடம் மீண்டும் ஏடிஎம் கார்டை ஒப்படைக்கும்போது மற்றொரு போலி கார்டை அவரிடம் கொடுத்துவிட்டு நைசாக அங்கிருந்து கிளம்பியுள்ளார். பின்னர் அந்தக் கணக்கிலிருந்து 56 ஆயிரம் ரூபாயை அந்த இளைஞர் வேறு ஒரு ஏடிஎம்மில் எடுத்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாகக் காவல் நிலையத்தில் கலைச்செல்வி புகாரளித்த நிலையில் குறிப்பிட்ட ஏடிஎம் மையத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றினர். காட்சிகளை அடிப்படையாக வைத்து மோசடியில் ஈடுபட்ட அந்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.