ADVERTISEMENT

1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அக்.1 முதல் காலாண்டு விடுமுறை! 

06:10 PM Sep 27, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT


ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் அக்டோபர் 1- ஆம் தேதி முதல் அக்டோபர் 12- ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை விடவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

வரும் அக்டோபர் 6- ஆம் தேதி முதல் அக்டோபர் 8- ஆம் தேதி வரை தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான 'எண்ணும் எழுத்தும் பயிற்சி' நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, அதன் காரணமாக, தொடக்கப் பள்ளிகளுக்கு அக்டோபர் 1- ஆம் தேதி முதல் அக்டோபர் 9- ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை விடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், வரும் அக்டோபர் 10- ஆம் தேதி முதல் அக்டோபர் 12- ஆம் தேதி வரை தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான இரண்டாம் கட்ட 'எண்ணும் எழுத்தும் பயிற்சி' நடத்தப்படவுள்ளது. இதனால் வரும் அக்டோபர் 12- ஆம் தேதி வரை ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை விடப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT