ADVERTISEMENT
ADVERTISEMENT
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வரும் 11 ஆம் தேதி இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அடுத்த மாதமான அக்டோபர் 30 ஆம் தேதி பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா நடைபெறுகிறது.
இதனையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் அக்டோபர் 31 ஆம் தேதி வரை இரண்டு மாத காலத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் அறிவித்துள்ளார். மேலும் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த வாகனங்கள் ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் உரிய அனுமதியின்றி நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Show comments