Skip to main content

இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் முதன்முறையாக ஸ்டாலின்...!

Published on 11/09/2019 | Edited on 11/09/2019

இமானுவேல் சேகரனாரின் நினைவு தினம் இந்த வருடம் மட்டும் ஸ்பெஷலானது. இந்த வருடம் செப்டம்பர் 11 அன்று நினைவுத்தினத்தன்று கட்சியின் தலைவரும், எதிர்கட்சித்தலைவருமான மு.க.ஸ்டாலின் பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரனாரின் நினைவு தினத்தில் அஞ்சலி செலுத்த பேருவகை அடைந்துள்ளனர் தேவேந்திரகுலமக்கள்.

 

Stalin for the first time in Emanuel Sekaran s memorial


கடந்த சிலவருடங்களாக நடைபெற்றதைப் போல், இந்த வருடமும் இமானுவேல் சேகரனின் 62வது நினைவு நாளிற்கு வாடகை வாகனத்தில் வரக்கூடாது, ஜோதி எடுத்து வரக்கூடாது என்று வழக்கம் போல் இராமநாதபுரம் மாவட்டம் முழுமைக்கும் 144 தடையுத்தரவை அமல்படுத்தியது மாவட்ட காவல்துறை. மாவட்டத்தில் பல இடங்கள் பிரச்சனைக்குரிய பகுதியாகவும், தடைசெய்யப்பட்ட வழித்தடங்களையும் கண்டறியப்பட்டு 200க்கும் அதிகமான இடங்களில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டும், கூடுதல் ஏ.டி.ஜி.பி.ஜெயந்த் முரளி தலைமையில் ஐ.ஜி, 6 டி.ஐ.ஜி-க்கள் ,18 எஸ்.பி-க்கள் ,18 ஏ.டி.எஸ்.பி-க்கள் ,44 டி.எஸ்.பி-க்கள் மற்றும் சிறப்பு அதிரடி படையினர் உள்பட மாவட்டம் முழுமைக்கும் 4500 போலீசார் இணைந்து பாதுகாப்பு பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.  

 

Stalin for the first time in Emanuel Sekaran s memorial

 

இதே வேளையில்,  காலை 8:30 மணி - 9 மணி - அதிமுகவிற்கும்,  காலை 9மணி - 9: 30 மணி- தேமுதிகவிற்கும், காலை 9:30 மணி - 10 மணி- திமுகவிற்கும், காலை 10 மணி - 10:30 மணி- இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கும், காலை 10:30 மணி - 11மணி - விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், காலை 11மணி - 11:30 மணி- பாஜகவிற்கும், காலை 11:30 மணி - 12 மணி அமமுகவிற்கும், பகல் 12மணி - 12:30 மணி - பகுஜன் சமாஜ் கட்சிக்கும், பகல் 12:30 மணி - 1 மணி - மதிமுகவிற்கும், பகல் 2மணி - 2:30 மணி- தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்திற்கும், மாலை 3 மணி - 3:30 மணி-புதிய தமிழகம் கட்சிக்கும் பரமக்குடி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த பதிவு செய்யப்பட்ட கட்சி பிரதிநிதிகளுக்கு நேர ஒதுக்கீட்டையும் குறிப்பிட்டது மாவட்ட நிர்வாகம்.

அதிகாலையிலேயே அருகிலுள்ள ஊர் மக்கள் அஞ்சலி செலுத்தி துவக்கி வைக்க, அதிமுக சார்பில் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி ஆகியோர் நினைவு அஞ்சலி செலுத்த, திமுக சார்பில் கழகத் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி. சுப.தங்கவேலன். தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் நினைவு அஞ்சலி செலுத்தினர்.

 

Stalin for the first time in Emanuel Sekaran s memorial

 

அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், " தியாகி இம்மானுவேல் சேகரனார்  தீண்டாமை ஒழிப்புக்காக பாடுபட்டவர். இந்திய ராணுவத்தில் பணி புரிந்தவர். 1950 விடுதலை இயக்கத்தில் பங்கேற்றவர். 1954 ல் தீண்டாமை ஒழிப்பு மாநாடு நடத்தியவர். அவரது புகழ் ஓங்கி ஒலிக்க வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் அவருக்கு மலர் அஞ்சலி செலுத்தி இருக்கிறோம். அவரது நினைவு நாள் குரு பூஜையை அரசு விழாவாக கொண்டாடுவீர்களா? எனக் கேட்கிறீர்கள். இது ஆட்சியாளர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி. நீங்கள் கேட்கும் இந்தக் கேள்வியில் இருந்து அடுத்து ஆட்சிக்கு வரப் போவது திமுகதான் என உணர்த்தி இருக்கிறீர்கள்." என்றார் அவர்.

ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் தங்களது சார்பாக பிரதிநிதிகளை அனுப்புவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் வேளையில், முதன்முறையாக தானே நேரடியாக வந்து இமானுவேல் சேகரனாருக்கு அஞ்சலி செலுத்திய ஸ்டாலினை ஆர்வமுடன் பார்த்து மகிழ்ச்சியடைந்தனர் பரமக்குடி மக்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.