ADVERTISEMENT

"12- ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்"- அரசுத் தேர்வு இயக்ககம் அறிவிப்பு!

10:40 PM Jul 22, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

தமிழகத்தில் 12- ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கு நாளை (23/07/2021) முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இது தொடர்பான அறிவிப்பில், "12- ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கு நாளை (23/07/2021) முதல் ஜூலை 27- ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மாவட்ட வாரியாக அரசுத் தேர்வுத்துறை சேவை மையம் மூலமாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். 12- ஆம் வகுப்பு மதிப்பெண் குறைவாக உள்ளதாகக் கருதும் மாணவர்கள் நாளை (23/07/2021) விண்ணப்பிக்கலாம்.மாணவர்கள் கட்டாயம் தங்களுக்குரிய அனைத்து பாடத் தேர்வுகளையும் எழுதுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட ஒரு பாடத்திற்கு மட்டும் தேர்வு எழுத முடியாது. தற்போது எழுதவுள்ள தேர்வில் பெறப்படும் மதிப்பெண்களே இறுதியானது. 12- ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு ஆகஸ்ட் 6- ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 19- ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும். 12- ஆம் வகுப்பு மதிப்பெண் குறைவாக உள்ளதாகக் கருதும் மாணவர்களுக்கும் ஆகஸ்ட் 6- ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 19- ஆம் தேதி வரை துணைத்தேர்வு நடைபெறும். 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் துணைத்தேர்வை எழுத விண்ணப்பிக்கத் தேவையில்லை" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT