ADVERTISEMENT

தமிழக பட்ஜெட்டில் மீன்வளத்துறைக்கு 1,229.85 கோடி  ஒதுக்கீடு 

11:22 AM Feb 14, 2020 | kalaimohan

2020 மற்றும் 21 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை துணை முதல்வரும், தமிழக நிதி அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் இன்று காலை 10 மணிக்கு பட்ஜெட் தாக்கல் மீதான உரையை தொடங்கினார்.

ADVERTISEMENT

காலை 10 மணிக்கு தொடங்கிய பட்ஜெட் மீதான நிதியமைச்சர் ஓபிஎஸ்ஸின் உரையில்,

ADVERTISEMENT


நடப்பு நிதியாண்டில் தமிழக அரசின் கடன் 4.56 லட்சம் கோடியாக இருக்கும் என தெரிவித்த ஓபிஎஸ்,

நீரை சிக்கனமாக பயன்படுத்தி திருத்திய நெல் சாகுபடி முறைக்கு 27.18 லட்சம் ஏக்கராக விரிவுபடுத்தப்படும். தமிழக பட்ஜெட்டில் உணவு மானியத்திற்கு 6,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு, 11.1 லட்சம் ஏக்கர் நெல் விதைப்பு முறை நாகை, திருவாரூர், ராமநாதபுரம், சிவகங்கைக்கு விரிவுபடுத்தப்படும்.

பொது விநியோக திட்டத்தை செயல்படுத்த கூட்டுறவு நிறுவனங்களுக்கு 400 கோடி மானியம். மின்சார துறைக்கு 20,115 கோடி, கல்விதுறைக்கு 34,181 கோடியும், தொல்லியல்துறைக்கு 39.93 கோடியும், கீழடியில் புதிய அகழ்வைப்பகம் அமைத்திட 12.21 கோடியும், பள்ளிக்கல்வித்துறைக்கு 34,181 கோடியும், உயர்கல்வி துறைக்கு 5,052.84 கோடியும், மருத்துவதுறைக்கு 15,839 கோடியும், பெண்கள் பாதுகாப்பான நிர்பயா திட்டத்திற்கு தமிழக பட்ஜெட்டில் 71 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதேபோல் தமிழக அரசு பெருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். காவல்துறைக்கு 8,876.57 கோடியும், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு 405.68 கோடியும், 2020-21 ஆண்டில் சிறைத்துறைக்கு 329.74 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மத்திய சிறைச்சாலைகளில் மேலும் 6 பெட்ரோல் நிலையங்கள் அமைக்கப்படும். 5 புதிய மாவட்டங்களில் 550 கோடியில் பெருந்திட்ட வளாகம் அமைக்க இடம் கண்டறியும் பணி தொடங்கியுள்ளது. பேரிடர் மேலாண்மைக்கு 1,360 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என வாசித்தார்.

மேலும் வாடகை ஒப்பந்த முத்திரைத்தாள் வரியை 1 சதவிகிதத்தில் இருந்து 0.25 சதவிகிதமாக குறைக்க அரசு முடிவுசெய்துள்ளது. ஒப்பந்தங்கள் தொடர்பான பதிவு கட்டணங்களுக்கு 1 சதவிகிதத்திலிருந்து 0.25 சதவிகிதம் குறைக்கப்படும். மீனாவர்களுக்காக மீன்பிடி தடைக்கால உதவி,சேமிப்பு திட்ட சிறப்பு உதவித்தொகைக்காக 298.12 கோடியும், 4,997 மீன்பிடி விசைப்படகுகளில் 18 கோடியில் ட்ரான்ஸ்பாண்டர்கள் பொருத்தப்படும். தமிழக பட்ஜெட்டில் மீன்வளத்துறைக்கு 1,229.85 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. விபத்துகளில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு 4 லட்சம் நிதியும், விபத்துகளில் ஊனமுற்றோருக்கு 2 லட்சமும் நிதி அளிக்கப்படும். சாலை பாதுகாப்பிற்கு 500 கோடி நிதி ஒதுக்கப்படும். நீதி நிர்வாகத்திற்கு 1,403.17 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் வெள்ள பாதிப்புகளை குறைக்க 100 கோடி மானியம் நிதிக்குழுவால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆட்சேபனையில்லாத புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படும். தமிழ் வளர்ச்சித்துறைக்கு 74.08 கோடி நிதி ஒதுக்கப்ட்டுள்ளது.

அம்மா விபத்து ஆயுள் காப்பீடு திட்டத்துக்கு 250 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எல்.ஐ.சியுடன் இணைந்து வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்கள் பயனடைய திட்டம் செய்யப்படுத்தப்படும், குடிமரமத்து பணிகளுக்கு 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என வாசித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT