ADVERTISEMENT

முதலமைச்சருடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை!

11:18 AM May 19, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT


10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமியுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகிறார். திட்டமிட்டப்படி 10 ஆம் வகுப்புத் தேர்வை நடத்துவதா? அல்லது இல்லையா? என்பது பற்றி ஆலோசிக்கப்படுகிறது. முதல்வருடன் நடைபெறும் ஆலோசனைக்குப் பின் 10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது பற்றி முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளதாகத் தகவல் கூறுகின்றன.

ADVERTISEMENT


ஜூன் 1- ஆம் தேதி முதல் ஜூன் 12- ஆம் தேதி வரை 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக 10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் வெளியூர்களில் இருந்து மாணவர்கள் தேர்வுக்கு வருவதற்கு இ-பாஸ் வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.



Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT