அவர் கட்சிக்காகவும் சமூகத்துக்காகவும் நிறைய பணிகளை செய்துள்ளார் . அவர் ஆற்றியிருக்கும் பணிகளை எடுத்துச் சொல்ல நேரம் போதாது. மரண தண்டனை விலக்கு, நீட் தேர்வு பிரச்சினை, ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினை, மீனவர்கள் பிரச்சினை, இந்திய பல்கலைக்கழகங்களில் தலித் மாணார்கள் பாகுபாட்டுடன் நடத்தப்படும் கொடுமை, குலசேகரன்பட்டிணத்தில் 2-வது செயற்கைக்கோள் இயங்கு தளம் அமைத்தல், மகளிருக்கான இட ஒதுக்கீடு, கல்வி உரிமை மசோதா, பாலியல் கொடுமைகளில் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு, தற்கொலையைக் குற்றமாக்கக் கூடாது, சமூக நீதி உட்பட ஏராளமான பிரச்சினைகளுக்காக வாதாடி வெற்றி பெற்றவர் கனிமொழி. அதோடு இல்லாமல் தமிழ் மீது மிகுந்த ஈடுபாடு உள்ளவராகவும் உள்ளார் . திமுக கழகத்தின் மகளிரணியை சிறப்பாக செயல்படுத்தி கலைஞரிடம் பாராட்டும் பெற்றவர் என்று கூறினார் .துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கும் அதிமுக - பாஜக கூட்டணிக்கு தண்டனை கொடுக்க வேண்டிய கட்டாயம் தூத்துக்குடி மக்களுக்கு இருக்கிறது. இவ்வாறுபிரச்சாரத்தின் போது மு.க.ஸ்டாலின் பேசினார்.