மேலும் 1996ஆம் ஆண்டில் இருந்து அரசியலை தீவிரமாக கவனிக்க ஆரம்பித்தேன். நான் அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில்தான் இருக்கிறது என்று கூறிவந்தேன். 2017ம் ஆண்டில் அரசியல் நிலையற்ற தன்மை உருவாகியிருந்ததால் சிஸ்டம் கெட்டுப்போயிருக்கிறது. முதலில் சிஸ்டத்தை சரி செய்யவேண்டும் என்று சொன்னேன். அரசியல் சிஸ்டத்தை சரி செய்ய வேண்டும். ஏன் அப்படிச் சொன்னேன் என்றால், மீன் குழம்பு வைத்த பாத்திரத்தை கழுவாமல் அதே பாத்திரத்தில் சர்க்கரைப் பொங்கல் வைத்தால் நன்றாக இருக்குமா?’’ என்று கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் எம்பி ரவிகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினி பேசியது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், "ஏன் மீன்குழம்பு வைத்த சட்டியைக் கழுவிவிட்டு பொங்கல் வைக்கவேண்டும்? புதிதாக ஒரு பாத்திரத்தில் வைக்கலாமே! இவரது திட்டத்தை சோதித்துப் பார்க்க ஏன் ஒரு நாட்டை இவர் உருவாக்கக்கூடாது? என்றும், கட்சித் தலைமைக்கு ஒருவர் ஆட்சித் தலைமைக்கு ஒருவர் என்பது இந்திய அளவில் காலகாலமாய் இருப்பதுதானே? மன்மோகன்சிங் பிரதமர்,சோனியா காங்கிரஸ் தலைவர். மோடி பிரதமர், நட்டா பாஜக தலைவர். மாநிலங்களிலும்கூட அப்படி இருக்கிறது என்றும், தன்னை ஆதரித்து ஆளாக்கிய தமிழ்நாட்டுக்கு நன்றிக் கடன் செலுத்த அவர்கள் தந்த புகழையே பயன்படுத்தலாம் : 1960களில் நிகழ்ந்ததைப்போலவே இப்போதும் மத்திய அரசால் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது.தமிழக நலன்களுக்காக திரு ரஜினிகாந்த் குரல் கொடுக்கலாம்" என்றும் குறிப்பிட்டு கருத்து கூறியுள்ளார்.