கள்ளக்குறிச்சி மாவட்டம் உளூந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க. உறுப்பினர் குமரகுரு. கரோனா தொற்று காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தநிலையில், அவரது மனைவி, மகன், மருமகள், அவரது கார் ஓட்டுநர் உட்பட அவருக்கு நெருக்கமானவர்கள் 10 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் எம்எல்.ஏ.-வின் மனைவிக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர் கணவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையிலேயே சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
எம்.எல்.ஏ. வசித்து வரும் உளுந்தூர்பேட்டை கிழக்குப் பகுதியில் உள்ள அவரது வீட்டில் அனைவரும் நேற்று முதல் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். பேரூராட்சி ஊழியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் அப்பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.