ADVERTISEMENT

திருவண்ணாமலை தொகுதி வேட்பாளர்கள்?– கோடிகளில் பட்ஜெட் போட்டுள்ள கட்சிகள்

08:21 PM Mar 09, 2019 | raja@nakkheeran.in

ADVERTISEMENT

திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதி திமுகவுக்கு சாதகமான தொகுதி என பெயர் பெற்றது. 1951 முதல் இப்போது வரை இந்த தொகுதியில் பலமுறை திமுகவே வெற்றி பெற்றுள்ளது. அதனால் இந்த தொகுதியில் சீட் பெற கடுமையாக திமுக தரப்பில் முயற்சிக்கிறது.

ADVERTISEMENT

திமுக கூட்டணி:

இந்த தொகுதியில் திமுகவே நிற்க முடிவு செய்துள்ளது. சீட் கேட்பாளர்கள் மனு செய்யலாம் என அறிவிப்பு செய்ததன் விளைவாக கடந்த முறை நின்று தோல்வியை சந்தித்த மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சி.என்.அண்ணாதுரை, திருவண்ணாமலை நகராட்சி முன்னால் சேர்மன் ஸ்ரீதரன், திருப்பத்தூர் நகர செயலாளர் ராஜேந்திரன் மூவரும் பணம் கட்டிவிட்டு பெரும் முயற்சியில் உள்ளனர்.

கட்சி நிர்வாகிகள் சிலர், மா.செவும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு எம்.எல்.ஏவின் மகன் மருத்துவர் கம்பனுக்கு சீட் தந்தால் பெரிய அளவில் வெற்றி பெற்றுவிடலாம் என நம்புவதால் அவருக்காக வேலுவிடம் பேசியுள்ளனர். அவரோ, ஊராட்சி செயலாளர்கள் கூட்டத்திலேயே, நான் என் மகனுக்கு கேட்கவில்லை எனக்கூறிவிட்டார். இதனால் அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இருந்தும் அவர் பெயரில் சிலர் மனு செய்துள்ளனர்.

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி இந்த தொகுதி மீது ஆர்வம் காட்டவில்லை. இதனால் அந்த கட்சி நிர்வாகிகள் பெரியதாக ஆர்வம் காட்டவில்லை.

அதிமுக கூட்டணி:

அதிமுகவே நேரடியாக இந்த முறை போட்டியிட நினைக்கிறது. முன்னாள் அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி, கொங்கு பகுதி ஆளும்கட்சி முக்கிய பிரமுகர்கள் மூலமாக தனக்கு சீட் கேட்டு முதல்வர் எடப்பாடியை நெருக்கிவருகிறார். கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் மூலமாக முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன் தனக்கு தேவை எனக்கேட்டு வருகிறார். சிட்டிங் எம்.பி வனரோஜா, முன்னால் மா.செ. ராஜன் போன்றோரும் சீட் வாங்கிவிட முட்டி மோதுகின்றனர்.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள பாமக, அந்த கூட்டணியில் இணையவுள்ளதாக கூறப்படும் தேமுதிக போன்றவை ஆர்வம் கட்டவில்லை. அதனால் திமுக – அதிமுக நேரடி போட்டி என்பது இப்போது வரை உறுதியாகியுள்ளது. வேட்பாளர்கள் யார் என்பது அடுத்த வாரம் தெரிந்துவிடும் என்கிறார்கள் இரண்டு கட்சி உறுப்பினர்களும்.

கோடிகளில் பட்ஜெட்:

அதிமுகவில் ஒரு தொகுதிக்கு 40 கோடி என தற்போது பட்ஜெட் போடப்பட்டுள்ளது. ஒரு ஓட்டுக்கு 500 ரூபாய் தரவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஜெ பாணியிலேயே, நிறுத்தப்படும் வேட்பாளருக்கு தலைமையே முழுவதும் செலவு செய்ய முடிவு செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. அதோடு, வலிமையான, கட்சிக்கு விசுவாசமான வேட்பாளராகவும் தேடுகிறது. இதனால் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி, ராமச்சந்திரன் இடையே போட்டி அதிகமாகியுள்ளது.

திமுகவில் ஒரு தொகுதிக்கு 30 கோடி என பட்ஜெட் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் 15 கோடி வேட்பாளராக அறிவிக்கப்படுபவர் செலவு செய்ய வேண்டும், மீதி 15 கோடியை தலைமை தரும். திமுகவில் வேட்பாளராக உள்ள அண்ணாதுரை என்னிடம், 5 கோடி தான் உள்ளது, மீதியை கட்டி என்னை ஜெயிக்க வைங்க உங்களுக்கு விசுவாசமா இருப்பன் என வேலுவிடம் கூறியுள்ளதாக கூறப்படுகிறது. திருப்பத்தூர் ந.செ ராஜேந்திரன், என்னால் 10 முடியும் என்றுள்ளார்.

இதுதான் தற்போது திமுகவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு விசுவாசமா இருந்தால் போதுமா, கட்சிக்கு விசுவாசமா இருக்கற ஆளை தேர்வு செய்து வேட்பாளரா நிறுத்தலையா என கேள்வி எழுந்து திமுகவினரிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT