பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் மத்திய அமைச்சர்களின் வருகை ஒரு புறம் இருக்க, பா.ஜ.க.வின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். தலைவர்களும் தமிழகத்தை குறி வைத்துள்ளனர். அந்த அமைப்பின் தலைவரான மோகன் பகவத் ஜனவரி மாதம் 13- ஆம் தேதி சென்னைக்கு வருகிறார்.
சென்னையில் குடிசைவாசிகளுக்கு மத்தியில் பொங்கல் விழாவை நடத்தி அவர்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துக் கொள்ளவிருக்கும் மோகன் பகவத், அந்த நிகழ்ச்சியில், "பா.ஜ.க.வின் ஆட்சியின் நிர்வாகத் திறனையும், தமிழக அரசியல் கட்சிகளால் தமிழகம் எந்தளவுக்கு பின்னோக்கிச் சென்றுள்ளது என்பதையும் விவரித்து பா.ஜ.க.வுக்கு ஆதரவான தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிக்கவிருக்கிறார்" என்கிறார்கள் தமிழக பா.ஜ.க.வினர்.