ADVERTISEMENT

தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அடிதடி

09:53 AM Nov 16, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகத்தில் இரு தரப்பு நிர்வாகிகளிடையே ஏற்பட்ட மோதலில் மூன்று பேர் காயமடைந்தனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகமான சென்னையில் உள்ள சத்தியமூர்த்திபவனில் நாடாளுமன்றத் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, கட்சியின் தமிழக மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் ஆகியோர் பங்கேற்க வந்தனர்.

அப்போது, நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரனின் ஆதரவாளர்கள், நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமாரை நீக்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அழகிரியையும் உள்ளே செல்ல விடாமல் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென கைகலப்பு ஏற்பட்ட நிலையில், ஒருவருக்கொருவர் கட்டையால் தாக்கிக் கொண்டனர்.

இதில் மூன்று பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர் பதற்றத்தைத் தணித்து அடிதடியை நிறுத்தினர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT