தற்போது நம்முடன் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் சேர்த்து 97 பேர் உள்ளோம். இந்த 22 தொகுதிகளிலும் வெற்றி பெறும் போது நமது எண்ணிக்கை 119 ஆக உயர்ந்து விடும். ஆட்சியை பறி கொடுத்து விடுவோம் என அதிமுக பயந்து தற்போது 3 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதற்காகத்தான் நாம் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர கடிதம் கொடுத்து அவர்களுக்கு செக் வைத்துள்ளோம். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்றும் கூறினார். மேலும் கோரம்பள்ளம் குளத்தில் தண்ணீர் தேக்க தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர், சத்துணவு கூடம், ரேசன் கடை அமைக்க சண்முகையா வெற்றி பெற்றவுடன் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவார். இந்த தொகுதி முழுவதும் சுற்றிசுற்றி வந்த போது குடிநீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. எனவே தாமிரபரணி ஆற்றில் சீவலப்பேரியில் இருந்து கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் கொண்டு வரப்படும் என்று பேசினார். இந்த இடைத்தேர்தலில் பிரச்சாரத்தின் போது ஆட்சி மாற்றத்திற்கு தேவையான சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் மக்களிடம் கூறியுள்ளார்.